2025 ஜூன் 28, சனிக்கிழமை

கிழக்கு மாகாணசபையின் செயற்பாடுகளை த.தே.கூ. கண்காணிக்க வேண்டும்

Suganthini Ratnam   / 2015 ஜூன் 24 , மு.ப. 03:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

கிழக்கு மாகாணசபையின் செயற்பாடுகளை கண்காணிக்க வேண்டிய பாரிய பொறுப்பு தமிழ்த்; தேசியக் கூட்டமைப்புக்கு உண்டு என்று அம்மாகாணசபை உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.

கிழக்கு மாகாணசபையின் தற்கால நிலை தொடர்பில் நேற்று செவ்வாய்க்கிழமை (23)  ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், 'கிழக்கு மாகாண கூட்டாட்சியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சரியான பாதையில் செயற்படுவார்கள்  என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு. இந்த நம்பிக்கை வீண் போகாதவாறு  மாகாணசபையின் செயற்பாடுகளை கண்காணிக்க வேண்டிய  பொறுப்பும் தமிழ்த் தேசியத் கூட்டமைப்புக்கு உண்டு' என்றார்.

'தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது  நாங்கள் நம்பிக்கை வைத்துள்ளோம். இருந்தபோதிலும், கடந்த மூன்று மாதகாலத்தில்  சபை நடவடிக்கைகள் தொடர்பில் த.தே.கூ. தெரியாமல் நடந்துகொண்டுள்ளமை  ஆச்சரியமாக உள்ளது.
இந்த வருடம் கிழக்கு மாகாண அபிவிருத்திக்காக வழங்கப்பட்ட 1,300 மில்லியன் ரூபாய் நிதியில், இதுவரையில்  80 மில்லியன் ரூபாய் மாத்திரமே கிழக்கு மாகாணசபைக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  இந்த  மாகாணசபையின் கடந்த வருட செயற்பாடுகளுடன் ஒப்பிடுகையில் பாரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது.' எனத் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .