2025 ஜூன் 28, சனிக்கிழமை

திவிநெகும பயனாளிகளுக்கு வீட்டுத்திட்டம் ஆரம்பித்து வைப்பு

Princiya Dixci   / 2015 ஜூன் 24 , மு.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா,வி.சுகிர்தகுமார்

குறைந்த வருமானம் கொண்ட வீடற்ற திவிநெகும பயனாளிகளுக்கு வீடமைக்கும் 'திரிய பியச' திட்டத்தின் கீழ் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட ஆறு பயனாளிகளுகக்கு வீடமைப்பதற்கான அடிக்கல் நடும் வைபவம், புதன்கிழமை (24) இடம்பெற்றது.
 
தேசிய வீடமைப்பு மற்றும் சமூர்த்தி அமைச்சின் தேசிய வீடமைப்பு தினத்தையொட்டி நாடளாவியரீதியில் இந்நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றது.
 
திவிநெகு திணைக்களத்தின் நிதியொதுக்கீட்டின் கீழ் திவிநெகு சமூக அபிவிருத்திப் பிரிவினால் இது நடைமுறப்படுத்தப்பட்டு வருகின்றது.
 
திவிநெகும தலைமைப்பீட முகாமையாளர் ஏ.எம்.எஸ்.நயீமா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனீபா, கருத்திட்ட முகாமையாளர் ஏ.எம்.ஹமீட், வங்கி முகாமையாளர் யூ.கே.நழீம் உட்பட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .