2025 ஜூன் 28, சனிக்கிழமை

தரவை பிள்ளையார் ஆலய சுவர் சேதம்: ஒருவர் கைது

Sudharshini   / 2015 ஜூன் 27 , மு.ப. 08:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா, எம்.எஸ்.எம். ஹனீபா,ஏ.ஜே.எம். ஹனீபா

கல்முனை தரவை பிள்ளையார் ஆலய சுவர்களிலுள்ள சிலைகளை சேதப்படுத்திய மனநோயாளி ஒருவரை கைதுசெய்து விளக்கமறியலில் வைத்துள்ளதாக கல்முனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.டபிள்யூ.ஏ. கபார் இன்று சனிக்கிழமை (27) தெரிவித்தார்.

நேற்ற (26) அதிகாலை குறித்த சிலைகளுக்கு சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளதையடுத்து ஆலயம் அமைந்துள்ள பகுதியில் அமைதியற்ற நிலை ஏற்பட்டது.

இதனையடுத்து, உடனடியாக ஸ்தலத்துக்கு விரைந்த கல்முனைப் பொலிஸார் ஆலயத்தின் குருக்களான சஜீவ குருக்கள் இனம்காட்டிய ஒருவரை கைது செய்துள்ளனர்.

சிலைகளுக்கு சேதம் விளைவித்ததாக கூறப்படும் இனம்தெரியாத நபர் சித்த சுவாதீனம் அற்றவர் ஒருவர் என் பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .