2025 ஜூன் 28, சனிக்கிழமை

இலத்திரனியல் கணினி கல்வி நிலையம் திறந்து வைப்பு

Sudharshini   / 2015 ஜூன் 27 , பி.ப. 12:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எஸ்.எம்.முஜாஹித்

சொறிக்கல்முனை ஹொலி குறோஸ் மகா வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட இலத்திரனியல் கணினி கல்வி நிலையம் மாணவர்களின்; பாவனைக்காக வெள்ளிக்கிழமை (26) திறந்துவைக்கப்பட்டது.  

இந்நிக்வில், கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எச்.இ.எம்.டபிள்யூ.ஜீ.திசாநாயக்கா, பாடசாலை கல்விச் சமூகத்தினால் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

சொறிக்கல்முனை ஹொலிகுறோஸ் மகா வித்தியாலய அதிபர் அருட்சகோதரி சிறியபுஸ்பம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்,  கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எச்.இ.எம்.டபிள்யூ.ஜீ.திசாநாயக்க, சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹதுல் நஜீம், நாவிதன்வெளி கோட்டக் கல்விப் பணிப்பாளர் எஸ்.சரவணமுத்து, சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தல பங்குத்தந்தை அருட்சகோதரர் எம்.ஆர்.திருச்செல்வம், கார்மேல் கன்னியர்மட பொறுப்பாளர் அருட்சகோதரி மறைமலர், மாணவர்கள், பெற்றேர்கள், ஆசிரியர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .