2025 ஜூன் 28, சனிக்கிழமை

அல் இபாதா கலாசார மன்றத்தின் றமழான் மாத விஷேட நிகழ்வு

Princiya Dixci   / 2015 ஜூன் 28 , மு.ப. 09:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில்

அல் இபாதா கலாசார மன்றத்தின் 4ஆவது வருட றமழான் மாத ஹதீஸ் மஜ்லிஸின் 10 நாட்கள் நிகழ்வு, அட்டாளைச்சேனை பெரிய பாலத்தடி முன்றலில் இன்று ஞாயிற்றுக்கிழமை (28) இடம்பெற்றது.

இன்றைய நிகழ்வுக்கு கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை பிரதம அதிதியாக கலந்துகொண்டு சிறப்பித்தார்.
 
மேலும் இந்நிகழ்வில், அட்டாளைச்சேனை பிரதேச ஊர் பிரமுகர்கள், உலமாக்கள், கல்விமான்கள் உள்ளிட்ட பொதுமக்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

றமழான் மாத 10 நாட்கள் விசேட பயான் நிகழ்த்தப்பட்டு அந்த பயான் நிகழ்விலிருந்து இறுதியில் கேள்வி கேட்கப்பட்டு விடையளித்தவர்களில் மூன்று பேர் குழுக்கள் முறை மூலம் தெரிவு செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .