Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 28, சனிக்கிழமை
Princiya Dixci / 2015 ஜூன் 28 , மு.ப. 10:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.ஜே.எம்.ஹனீபா
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தொடர்பாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன அவர்கள் அண்மையில் தெரிவித்துள்ள பதவிகளுக்காக அமைச்சர் ரவூப் ஹக்கீம் மதம் கூட மாறுவார் என்ற கருத்து இலங்கையிலுள்ள ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தையும் புனித றமழான் மாதத்தில் கவலையடையச் செய்துள்ளதாகவும் இந்த அரசு முஸ்லிம் சமூகத்தின் மீது வைத்துள்ள கபடத்தானமான பரிவையும் தெளிவாக எடுத்துக் காட்டுவதாகவும் தெளிவாக அறியமுடிகின்றது.
அமைச்சரின் இந்த கருத்தை வன்மையாக கண்டிப்பதாக சம்மாந்துறை சலாமியா சமூக சேவைகள் அமைப்பின் ஆலோசகரும் முன்னாள் சம்மாந்துறைப் பிரதேச சபையின் எதிர்கட்சி தலைவருமான சிரேஷ்ட சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முஸ்தபா தெரிவித்துள்ளார்.
சம்மாந்துறையில் சலாமியா சமூக சேவை அமைப்பின் தலைவர் எஸ்.எல்.றக்கீப் தலைமையில் நேற்று சனிக்கிழமை (27) நடைபெற்ற எதிர்காலத்தில் சம்மாந்துறையின் அரசியல் பிரதிநிதித்துவத்தை பெற்றுக்கொள்வது தொடர்பாக ஏற்பாடு செய்யப்பட்ட கலந்துரையாடல் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் இங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்ககையில், இந்த நாட்டில் இடம் பெற்றுக் கொண்டிருந்த கெடூரமாண ஆட்சியினை இல்லாமல் செய்து ஒரு நல்லாட்சியினை ஏற்படுத்துவதற்காக உழைத்த இந்த அரசில் அரங்கிலே முஸ்லிம் மக்களின் குரலாகவும் சர்வதேச ரீதியான அங்கிகாரத்தை பெற்றுள்ள அமைச்சரவையின் பொறுப்பு வாய்ந்த அமைச்சராகவும் இருக்கின்ற அiமைச்சர் ரவூப் ஹக்கீம் தொடர்பாக அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறிய கருத்து தொடர்பாக ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகத்திடமும் அமைச்சர் ரவூப் ஹக்கீமிடமும் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என நான் வேண்டுகோள் விடுக்கின்றேன்.
அமைச்சர் ராஜித, மற்றுமொரு ஊடக அறிக்கையில் தெரிவித்த கருத்தானது நல்லாட்சியினை ஏற்படுத்துவதற்கான எமது போராட்டத்தின் போது அமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கு எந்தவித கொடுக்கல் வாங்கல்களையும் மேற்கொள்ளவில்லை எனத் தெரிவித்தார்.
இந்தக் கருத்திலிருந்து விளங்கிக் கொள்ளமுடிகின்றது ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்த கொடுக்கல் வாங்கல்கள் செய்யப்பட்டு உறுப்பினர்களை தம்வசப்படுத்திக் கொண்ட நிலையில் எந்தவொரு எதிர்பார்ப்புக்களுமில்லாத நிலையில் தனது சமூகத்துக்காக சகலவற்றையும் இழந்துவிட்டு நல்லாட்சிக்காக மக்களை ஒன்றினைத்த ஒருதேசிய தலைவர் மீது பொறுப்புணர்வற்ற விதத்தில் பொறுப்புமிக்க அமைச்சரவையின் அமைச்சர் ராஜித சேனாரத்ன கருத்து தெரிவித்துள்ளமை வெட்கமாகவும் வேதனையாகவும் இருக்கின்றது எனவும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago
27 Jun 2025