2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் அதி உயர்பீட அமர்வு

Princiya Dixci   / 2015 ஜூன் 28 , பி.ப. 01:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.ஜே.எம்.ஹனீபா, பைஷல் இஸ்மாயில்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அதி உயர்பீட அமர்வு, எதிர்வரும் செவ்வாய்கிழமை (30) கூடவுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் என்.ரீ.ஹசனலி அறிவித்துள்ளார். 

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு எதிர்வரும் ஜுலை 6ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரை வேட்புமனுக்கள் கோரப்படவுள்ள நிலையிலேயே இந்த அவசர உயர்பீட கூட்டம் நடைபெறவுள்ளது. 

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி கூட்டுச் சேர்ந்து போட்டியிடுவதா? அல்லது தனித்துப் போட்டியிடுவதா, கூட்டு சேர்ந்து போட்டியிடுவதாக இருந்தால் எக்கட்சியுடன் இணைந்து போட்டியிடுவது? என்பது குறித்து அன்றைய தினம் கூடும் அரசியல் அதி உயர்பீடத்தில் தீர்மானிக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .