2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

14 வயது சிறுமி மீது வன்புணர்வு; சந்தேகநபர் தலைமறைவு

Sudharshini   / 2015 ஜூன் 29 , மு.ப. 10:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.ஜமால்டீன்

அட்டாளைச்சேனை-10 ஆம் பிரிவைச் சேர்ந்த 14 வயது சிறுமியை துஷ்பிரயோகத்துக்குட்படுத்திய சந்தேகநபர், தலை மறைவாகியுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸ் நியைத்தில் சிறுமியின் தந்தை, ஞாயிற்றுக்கிழமை (28) முறைப்பாடு செய்துள்ளார்.

குறித்த சிறுமியின் தந்தைக்கும் முதல் மனைவிக்கும் பிறந்தவனே, சிறுமியை வன்புணர்வுக்குட்படுத்தியுள்ளதாக பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிறுமியின் தாய், தொழில் நிமித்தம் வெளிநாடு சென்றுள்ள நிலையில், சிறுமி தனது சகோதரி வீட்டில் வசித்து வந்துள்ளார்.

மேற்படி சந்தேகநபர், ஏற்கனவே திருமணமானவர் எனவும் அவரை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .