2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு டயர்கள் வழங்கி வைப்பு

Princiya Dixci   / 2015 ஜூன் 29 , பி.ப. 12:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா, எம்.எஸ்.எம். ஹனீபா

வாழ்வாதாரத்தை மேன்படுத்தும் திட்டத்தின் கீழ் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு ஒரு சோடி டயர்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு, ஞாயிற்றுக்கிழமை (28) கொம்டெக் நிறுவனத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
 
கிழக்கு மாகாண சபையின் குழுத்தலைவரும் உறுப்பினருமான ஏ.எம்.ஜெமீல் எடுத்துக்கொண்ட முயச்சியின் பயனாக அவரது அபிவிருத்தி நிதியிலிருந்து ரூபாய் 10 இலட்சம் நிதியொதுக்கீட்டில் இவ்வுதவி வழங்கி வைக்கபட்டது.
 
மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீலின் பிரத்தியோக செயலாளர் சீ.எம்.ஏ.முனாஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு சாய்ந்தமருது பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எல்.ஏ.மஜீட் மாகாண சபை உறுப்பினரின் செயலாளர் எம்.ஐ.எம்.பாஸி, இணைப்பாளர்களான எஸ்.ஏ.வஹாப், எம்.எஸ்.எம்.றிஸ்தி மற்றும் ஏ.ஆர்.எம்.பசில் உள்ளிட்டோர் கலந்து சாரதிகளுக்கு டயர்களை வழங்கி வைத்தனர்.
 
அம்பாறை மாவட்ட வரலாற்றில் முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு இவ்வாறான உதவிகள் வழங்கப்பட்டது இதுவே முதல் தடவையாகும். இதன்போது சாய்ந்தமருதைச் சேர்ந்த 194 முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு ஒரு சோடி டயர்கள் வீதம் வழங்கிவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .