2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

புதிய மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்

Princiya Dixci   / 2015 ஜூன் 30 , மு.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா 

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்துக்கு 2013/2014 கல்வி ஆண்டு மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் ஜூலை மாதம் 06ஆம், 08ஆம் திகதிகளில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தென்கிழக்கு பல்கலைக்கழக பதிவாளர் எச். அப்துல் சத்தார் நேற்று திங்கட்கிழமை (29) தெரிவித்தார். 

இதற்கிணங்க, கலை காலாசார பீடம், வர்த்தக முகாமைத்துவ பீடம் மற்றும் இஸ்லாமிய கற்கைகள் அரபு மொழி பீட புதிய மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் 06ஆம் திகதியும் பிரயோக விஞ்ஞான பீட புதிய மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் 08ஆம் திகதியும் ஆரம்பிக்கப்படும்.

விடுதி வசதிகள் பெறுவதற்கு தகுதி பெற்ற மாவணர்களுக்கு தங்களது கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் தினத்துக்கு முன்தினம் பி.ப. 5.00 மணிக்கு முன்னர் தத்தமது விடுதிகளுக்கு சமுகமளிக்குமாறும் அவர் அறிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .