2025 ஒக்டோபர் 03, வெள்ளிக்கிழமை

பிரேரணை நிறைவேற்றம்

Princiya Dixci   / 2015 ஜூன் 30 , மு.ப. 10:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எஸ்.எம்.முஜாஹித், எம்.எஸ்எ.ம். ஹனீபா 

சாய்ந்தமருது பிரதான வீதியையும் பொலிவேரியன் நகரையும் இணைக்கும் வடக்கு வீதிக்கு, நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் மர்ஹூம் றிஸ்வி சின்னலெப்பையின் பெயரை சூட்டுவதற்கு கல்முனை மாநகர சபையில் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது.

கல்முனை மாநகர சபையின் மாதாந்த சபை அமர்வு, நேற்று திங்கட்கிழமை (29) மாலை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி எம்.நிஸாம் காரியப்பர் தலைமையில் நடைபெற்ற போது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் எம்.ஐ.எம்.பிர்தௌஸ் இது தொடர்பிலான பிரேரணையை சமர்ப்பித்தார்.

இதனை மாநகர சபையின் பிரதி முதல்வர் ஏ.எல்.அப்துல் மஜீத் ஆமோதித்து உரையாற்றினார். இதனைத் தொடர்ந்து பிரேரணை அனைத்து உறுப்பினர்களினதும் ஆதரவுடன் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

இதன் பிரகாரம் சாய்ந்தமருது பிரதான வீதியையும் பொலிவேரியன் நகரையும் இணைக்கும் வடக்கு வீதிக்கு நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் மர்ஹூம் றிஸ்வி சின்னலெப்பையின் பெயரை சூட்டுவதற்கு, மேற்கொண்டு எடுக்க வேண்டிய நடவடிக்கையை முன்னெடுக்குமாறு சபை செயலாளருக்கு முதல்வர் உத்தரவிட்டார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X