2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

'அரசியல் பணி செய்வதற்காக சிறந்த கட்சியை தெரிவுசெய்தேன்'

Suganthini Ratnam   / 2015 ஜூலை 01 , மு.ப. 06:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

'மக்களுக்கு சிறந்த அரசியல் பணி செய்ய வேண்டும் என்பதற்காக  சிறந்த கட்சியை தெரிவுசெய்துள்ளேன்' இவ்வாறு    தேசிய ஐக்கிய முன்னணியின் தேசிய அமைப்பாளர் நௌசாட் மஜீட் இன்று (01)தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து தேசிய ஐக்கிய முன்னணிக்கு மாறியமை  தொடர்பில் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், 'கட்சிகள் மக்களுக்காக இருக்கின்றன. கட்சிகளுக்கு அடிமைப்பட்டு அரசியல் செய்யும் முதுகு எலும்பு அற்ற அரசியல்வாதியாக நான் இருக்க விரும்பவில்லை' என்றார்.

'இன்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இரண்டாக பிளவுபட்டு தத்தளிக்கின்றது. தேர்தலுக்கு முகங்கொடுக்கவுள்ள இச்சந்தர்ப்பத்தில் முஸ்லிம்களுக்கு பலமாக குரல் கொடுக்கக்கூடிய அரசியல் கட்சியின் தேவைப்பாடு உணரப்பட்டுள்ளது.

எதிர்வரும்  பொதுத் தேர்தலில் நான் போட்டியிடுவதா, இல்லையா என்பதை  தற்பொழுது நான் இணைந்துள்ள கட்சியே தீர்மானிக்கவேண்டும்' எனத் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .