2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

தேசிய காங்கிரஸ் கட்சியின் உயர்பீடக் கூட்டம் 3ஆம் திகதி

Sudharshini   / 2015 ஜூலை 01 , மு.ப. 07:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தேசிய காங்கிரஸ் தனித்து போட்யிடுவதா  அல்லது ஏனைய கட்சிகளுடன் இணைந்து போட்டியிடுவதா என்பது தொடர்பில் ஆராயும் உயர்பீடக் கூட்டம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (03) தேசிய காங்கிரஸ் கட்சியின் தலையைகத்தில் இடம்பெறவுள்ளதாக கட்சியின் தேசிய அமைப்பாளரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான எம்.எஸ்.உதுமாலெப்பை புதன்கிழமை(01) தெரிவித்தார்.

கட்சியின் தலைவரும்; உள்ளூராட்சி, மாகாண சபைகளின் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாஉல்லாவின் தலைமையில் 03ஆம் திகதி பி.ப. 4.00 மணிக்கு நடைபெறவள்ள இக்கலந்துரையாடலில் கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள், முக்கியஸ்தர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

இதன்போது அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் போட்டியிடுவது தொடர்பாக ஆராயப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

 

 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .