2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

கஞ்சா வைத்திருந்தவருக்கு அபராதம்

Princiya Dixci   / 2015 ஜூலை 01 , மு.ப. 07:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா 

அக்கரைப்பற்று பிரதேசத்தில் கஞ்சா வைத்திருந்த நபருக்கு அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதிபதியும் நீதவான் நீதிமன்ற நீதிபதியுமான எச்.எம்.எம். பஸீல், 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்ததுடன் ஒரு வருடம் புனர்வாழ்வு முகாமில் வைக்குமாறும் நேற்று செவ்வாய்க்கிழமை (30) உத்தரவிட்டார். 

அக்கரைப்பற்று பிரதேசத்தில் குறித்த நபர், கஞ்சா வைத்திருந்தமை தொடர்பில் திங்கட்கிழமை (29) அக்கரைப்பற்று பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலொன்றின் அடிப்படையில் ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார் அவரை கைதுசெய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபரை அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதிபதியும் நீதவான் நீதிமன்ற நீதிபதியுமான எச்.எம்.எம். பஸீல் முன்னிலையில்  ஆஜர் செய்தபோதே நீதவான் இவ்வாறு உத்தரவிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .