2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

'மாகாணசபை உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்யப் போவதில்லை'

Suganthini Ratnam   / 2015 ஜூலை 03 , மு.ப. 06:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கார்த்திகேசு

அம்பாறை மாவட்டத்தில் தமிழரசுக் கட்சியின் சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ள  கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ரி.கலையரசன், தனது பதவியை இராஜினமா செய்யாது அம்பாறை மாவட்டத்தில் தேர்தல் வேட்பாளராக போட்டியிடவுள்ளதாக  அவர் தெரிவித்தார்.

இது தொடர்பில் இன்று வெள்ளிக்கிழமை அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ' எனது கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பதவியை  இராஜினாமா  செய்வது தொடர்பாக நான் எந்தவொரு கருத்தையும் வெளியிடவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை பீடங்களோ அல்லது நான் போட்டியிடவுள்ள தமிழரசுக் கட்சியின் தலைமைப் பீடங்களோ இவ்வாறு எந்த கருத்தையும்  இதுவரை வெளியிடவில்லை. அவ்வாறான தேவைப்பாடும் இல்லை'என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .