Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை
Sudharshini / 2015 ஜூலை 04 , மு.ப. 08:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரீகேறஹ்மத்துல்லா
எதிர்வரும் பொதுத் தேர்தலில் தனித்தா அல்லது கூட்டிணைந்தா போட்டியிடுவது என்பது தொடர்பில் தேசிய காங்கிரஸ் இன்னும் முடிவுக்கு வரவில்லை.
இது தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமை (06) ஊடகவியலாளர் மாநாட்டில் அறிவிக்கப்படவிருப்பதாக தேசிய காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான எம்.எஸ். உதுமாலெப்பை சனிக்கிழமை (04) தெரிவித்தார்.
எதிர்வருகின்ற பொதுத் தேர்தலில் தனித்தா அல்லது இணைந்தா போட்டியிடுவது தொடர்பிலான கட்சியின் உயர்பீடக் கூட்டம் நேற்று வெள்ளிக்கிழமை(03) கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கட்சியின் எதிர்கால நடவடிக்கை மற்றும் எதிர் வருகின்ற தேர்தல் பற்றி ஆராயப்பட்ட போதிலும் காத்திரமான எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என தெரியவருகின்றது.
பொதுத் தேர்தல் தொடர்பில் கட்சியின் முக்கிய தீர்மானங்களை மேற்கொள்ளும் வகையில் தேசிய காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா தலைமையிலான குழுவொன்றும் அமைக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
1 hours ago