Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை
Thipaan / 2015 ஜூலை 04 , மு.ப. 09:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம். ஹனீபா
எதிர்வரும் பொதுத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் ஜக்கிய தேசிய கட்சியின் சார்பில் போட்டி இடுவதற்கு வேட்பு ம
மனு கிடைத்தால் போட்டியிடுவேன் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரும் ஜக்கிய தேசியக் கட்சியின் அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேச அமைப்பாளருமான எம்.ஏ. அப்துல் மஜீட், இன்று சனிக்கிழமை (04) தெரிவித்தார்.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டி இடுவது தொடர்பாக அவருடன் வினவிய போதே இவர் இதைத் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
முஸ்லிம்களின் தனித்தவத்தை காப்பதற்கு உருவாக்கப்பட்ட ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், அதன் தனித்துவத்தை இழந்து பேரினவாதக் கட்சியாக ஜக்கிய தேசியக் கட்சியுடன் சங்கமித்து பொதுத் தேர்தலில் போட்டி இடுவதற்கு தீர்மானித்தள்ளமை அக்கட்சியின் அரசில் வங்குரோத் நிலையை எடுத்துக் காட்டுகின்றது.
எதிர்வரும் பொதுத் தேர்தல் விகிதாசார தேர்தல் முறையில் நடைபெறவுள்ளது.
எதிர்வரும் காலங்களில் தொகுதி வாரியாக தேர்தல் நடைபெறவுள்ளமை தொகுதி வாரி தேர்தல் துறையானது சிறுபான்மை சமூகத்தினருக்கு பெரும் பாதிப்பாகும்.
இவ் விகிதாசார தேர்தல் முறையின் கீழ் நடைபெறவுள்ள இத்தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் வாழுகின்ற தமிழ் பேசும் சமூகங்கள் ஒன்றினைந்து அம்பாறை மாவட்டத்தை தமிழ் பேசும் மாவட்டமாக முன்கொண்டு செல்வதற்கு எல்லோரும் இணைய வேண்டும்.
அம்பாறை மாவட்டத்தில் 78 சதவீதம் தமிழ் பேசும் மக்களும் 22 வீதம் சிங்களவர்களும் வாழ்கின்றார்கள் இவர்கள்தான் அம்பாறை மாவட்டத்தை ஆளமுடியுமென்றால் ஏன்? தமிழ் பேசும் சமூகத்தினரால் இம்மாவட்டத்தினை ஆள முடியாது என கேள்வி எழுப்பினார்.
இத்தேர்தலை அடுத்து அம்பாறை மாவட்டத்தை தமிழ் பேசும் சமூகம் ஆளுகின்ற மாவட்டமாக பிரகரனப்படுத்த வேண்டும்.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கு ஜக்கிய தேசியக் கட்சி அழைத்தால் போட்டியிடுவேன் அல்லது கட்சியினால் எடுக்கப்படும் முடிவுக்கு கட்டுப்படுவேன் என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .