2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

மஹிந்தவை நிரந்தரமாக மெதமுலனைக்கு அனுப்பவேண்டும்: ஹஸன் அலி

Thipaan   / 2015 ஜூலை 05 , மு.ப. 06:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சி.அன்சார்

மக்களால் நிராகரிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ஷ இனவாத அரசியலுக்குள் ஒழிந்து கொண்டு  மீள் எழுச்சி பெறும் அளவுக்கு அரசியல் வங்குரோத்து அடைந்துள்ளார். அவரை, எதிர்வருகின்ற தேர்தலுடன் நிரந்தரமாக மெதமுலனைக்கு அனுப்ப வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் சம்மாந்துறைத் தொகுதியின் பிரதான அமைப்பாளர் எம்.ஏ. ஹஸன் அலி தெரிவித்தார்.

எதிர்வருகின்ற பொதுத் தேர்தலில் பிரதமர் பதவிக்கு மஹிந்த ராஜபக்ஷ மற்றும் சந்திரிகா பண்டாரநாயக்க உட்பட எத்தனை பேர் போட்டியிட்டாலும் இத்தேர்தலில், ஐக்கிய தேசியக் கட்சி அனைத்து மக்களின் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று மாபெரும் வெற்றியீட்டுவதோடு ரணில் விக்கிரமசிங்க மீண்டும் பிரதமராக தெரிவு செய்யப்படுவார் இதனை எச்சக்திகளினாலும் தடுத்த நிறுத்த முடியாது என தெரிவித்தார்.

சம்மாந்துறையிலுள்ள தனது கட்சி அலுவலகத்தில்  புதன்கிழமை (01) ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்களுக்கு எதிர்வருகின்ற பொதுத் தேர்தல் சம்பந்தமாக விளக்கமளிக்கும் கூட்டத்தில் உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

பிரதமர் பதவியை முக்கியத்துவமற்றதாக்கிய 1978ஆம் ஆண்டு அரசியலமைப்பு அறிமுகப்படுத்தப்பட்ட பின்னரும் 19ஆவது அரசியலமைப்புத்திருத்தம் நிறைவேற்றப்பட்டதன் பின்னரும் பிரதமர் பதவியை முக்கியமானதாக்குகின்ற முதலாவது தேர்தலாக எதிர்வருகின்ற பொதுத்தேர்தல் அமையவுள்ளது.  

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான தேசிய அரசாங்கத்தின் கடந்த ஆறு மாதகால ஆடசியில் நாட்டில் ஜனநாயகத்தின் உண்மையான பெறுமானத்தை வெளிக்காட்டி நிற்கின்றது.

மக்களால் நிராகரிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ஷ இனவாத அரசியலுக்குள் ஒழிந்து கொண்டு  மீள் எழுச்சி பெறும் அளவுக்கு அரசியல் வங்குரோத்து அடைந்துள்ளார். அதிகாரத்தை கைப்பற்ற எதனையும் செய்வார். மஹிந்தவின் மீள்புரட்சினை தோற்றகடிக்க வேண்டும். அவர் அரசியலில் மீண்டும் தலைதூக்க மக்கள் இடமளிக்கக்கூடாது.

எதிர்வருகின்ற பொதுத்தேர்தலில் சிறுபான்மை மக்களுக்கு எதிரான இனவாத உணர்வலைகளை சிங்கள மக்களின் மத்தியில்  விதைத்தும், சிங்கள மக்களின் அனுதாபத்தை எதிர்பார்த்து அதன் மூலம் வாக்குகளை பெற்று மீண்டும் ஆட்சியினை பிடிக்கலாம் என மஹிந்த ராஜபக்ஷ கனவு காண்கின்றார். இவரின் கனவு ஒருபோதும் நிறைவேறாது.

முற்றுமுழுதாக இனவாதத்தைக் கையிலெடுத்துக் கொண்டே மீண்டும் அதிகாரத்துக்கு வரும் தனக்கான பயணத்தில் இறங்கி இருக்கும் மஹிந்த ராஜபக்ஷவுக்கு முறையான பாடத்தினை மீண்டும் கற்பிக்க நாட்டு மக்கள் பிரதமர் ரணில் விக்கிரசிங்கவின் கரங்களைப் பலப்படுத்த வேண்டியது அவசியமாகும்.

இல்லையெனின் மீண்டும் கொடுங்கோல் ஆட்சியும், ஊழல் மோசடிகளும் தலைவிரித்தாடக்கூடிய சூழ்நிலை தோற்றுவதை தடுக்க முடியாமல் போகும்.

ஐக்கிய தேசியக் கட்சியானது எதிர்வருகின்ற பொதுத்தேர்தலில் சக்திமிக்கதான அரசாங்கம் ஒன்றை அமைத்து ஊழல் அற்ற நல்லாட்சிமிக்க ஜனநாயகத் தன்மையுடைய அரசாங்கம் ஒன்றை உருவாக்கும்.

யுத்தவெற்றி, இனஅடக்குமுறை, மத ஒடுக்குமுறைகள் மூலம் நாடு ஜனநாயகம் கேள்விக்குறியாக்கப்பட்டு சர்வாதிகாரப்பதையில் ஆட்சியை கொண்டு சென்ற மஹிந்த ராஜபக்ஷவின் அரசியல்  மீள்எழுச்சி நாட்டை மீண்டும் இருண்ட யுகத்துக்கு இட்டுச்செல்லும். அதனை மக்கள் ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது.

எனவே, நாட்டில் நல்லாட்சி மலர்ந்ததன் பின்னர் ஐக்கிய தேசியக்கட்சியின் செல்வாக்கு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. அதனால் எதிர்வருகின்ற பொதுத்தேர்தலில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றியை  தடுக்க முடியாது. அதேவேளை மஹிந்த ராஜபக்ஷவின் தோல்வியினையும் தடுக்க முடியாது என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .