Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை
Thipaan / 2015 ஜூலை 05 , மு.ப. 07:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம். ஹனீபா
'சர்வமத மற்றும் சர்வயின வேறுபாடுகளின் அடிப்படையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தல்' எனும் தொனிப்பொருளிலான செயலமர்வு அட்டாளைச்சேனை பலநோக்கு கூட்றவுச் சங்க மண்டபத்தில் சனிக்கிழமை (04) நடைபெற்றது.
அட்டாளைச்சேனை கிராமிய புனர்வாழ்வு அமைப்பினால் தேசிய சாமாதானப் பேரவையின் அனுசரனையுடன் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.
கிராமிய புனர்வாழ்வு அமைப்பின் இணைப்பாளர் யூ.எல். உவைஸ் தலைமையில் நடைபெற்ற செயலமர்வில் தேசிய சமாதான பேரவையின் திட்டமிடல் இணைப்பாளர் சமன் செனவிரத்ன கலந்து கொண்டு, சமூகங்களிடையே சமூக வலையமைப்பை ஏற்படுத்தி அதனூடாக நல்லினக்கத்தை ஏற்படுத்துவது எனும் தொனிப்பொருளில் உரையாற்றினார்.
இந்நிகழவில், அம்பாறை மாவட்டத்திலுள்ள தமிழ், முஸ்லிம், கத்தோலிக்க மதகுருமார், சிவில் அமைப்புக்களின் உறுப்பினர்கள் சமயத் தலைவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அம்பாறையில்; கடந்த 2 வருடங்களுக்கு முன்னர் நடைபெற்ற தயட்ட கிருள்ள கண்காட்சிக்கு கண்காட்சிகூடங்கள் நிர்மாணிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு சொந்தமான காணியை இராணுவத்தினர் ஆக்கிரமித்துள்ளனர்.
இதனை மீளப் பெறுவது தொடர்பாக மாவட்ட அரசாங்க அதிபரிடம் பேச்சுவார்த்;தை நடத்துவது தொடர்பில் இங்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .