2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

விபத்தில் சிறுவன் மரணம்

Suganthini Ratnam   / 2015 ஜூலை 05 , மு.ப. 08:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

அம்பாறை. சுதுவெல்ல பகுதியில்  இன்று ஞாயிற்றுக்கிழமை  இடம்பெற்றுள்ள விபத்தில்  17 வயதுடைய  சிறுவன்  ஒருவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 இவன்  பயணித்த மோட்டார் சைக்கிள் பஸ் ஒன்றுடன் நேருக்குநேர் மோதியதால் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


விபத்தில் பலத்த காயமடைந்த சிறுவன்  அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.

இவ்விபத்துடன் தொடர்புடைய பஸ்ஸின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், அம்பாறை பொலிஸார் விபத்து தொடர்பில் விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .