Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Thipaan / 2015 ஜூலை 05 , பி.ப. 01:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.ஜே.எம்.ஹனீபா
பொத்துவில் பகுதியில் ஏழு கிலோ கிராம் கஞ்சா போதைப் பொருளை கொண்டு சென்ற இரு சந்தேக நபர்களை நேற்று (04) கைது செய்துள்ளதாகவும் அவர்கள் பயணித்த லொறி ஒன்றை கைப்பற்றியுள்ளதாகவும் பொத்துவில் பொலிஸார் தெரிவித்தனர்.
திஸ்ஸமகாராம பகுதியில் இருந்து பொத்துவில் வழியாக அக்கரைப்பற்றுக்கு மரக்கறி மற்றும் பழவகைகளையும் ஏற்றிச் சென்ற லொறி ஒன்றை சந்தேகத்தின் பெயரில் சோதனைக்குற்படுத்திய போதே கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக பொத்துவில் பொலிஸார் தெரிவித்தனர்.
கதிர்காமம் மற்றும் திஸ்ஸமஹராம பகுதிகளை சேர்ந்த லெஸ்லி அபே குணவர்த்தன மற்றும் சரத் ஆனந்த ஆகியோரே கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் குறித்த கஞ்சா போதைப்பொருள் திஸ்ஸமகாராமயிலிருந்து அக்கரைப்பற்று வியாபாரி ஒருவருக்கு எடுத்துச் சென்றமை பொலிஸார் மேற்கொண்ட விசாரனையின்போது தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களை பொத்துவில் நீதவான் நீதிமன்றில் நாளை (06) ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
20 minute ago
9 hours ago
02 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
9 hours ago
02 Oct 2025