2025 ஜூன் 26, வியாழக்கிழமை

சிவில் பாதுகாப்புப் படையினரினதும் சீனி கூட்டுத்தாபனத்தினரதும் கரும்பு அறுவடை நிகழ்வு

Princiya Dixci   / 2015 ஜூலை 08 , மு.ப. 05:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில்

சிவில் பாதுகாப்பு படையினர் மற்றும் ஹிங்குரான சீனி கூட்டுத்தாபனத்தினர் இணைந்து மேற்கொண்ட கரும்பு அறுவடை செய்யும் ஆரம்ப கட்ட நிகழ்வு, தீகவாபி வலயத்தில் இன்று புதன்கிழமை (08) ஆரம்பித்து வைக்கப்பட்டது. 

சிவில் பாதுகாப்புப் படையின் அம்பாறையின் கட்டளையிடும் அதிகாரி மேஜர் வர்ணகுல சூரிய தலைமையில் இடம்பெற்ற இந்த கரும்பு அறுவடை நிகழ்வில் ஹிங்குரான சீனி கூட்டுத்தாபனத்தின் பயிர் செய்கைப் பிரிவின் பிரதி பொது முகாமையாளர் டீ.நயனா அபயசேகர, பயிர் செய்கை முகாமையாளர் எ.எம்.ஹரீஸ், உப பொலிஸ் பரிசோதகர் ரீ.எச்.அதான் உட்பட சிவில் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் படையினர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் கரும்பு அறுவடை செய்வதற்கான ஆயுதங்கள் மற்றும் தளபாடங்களும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .