Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Sudharshini / 2015 ஓகஸ்ட் 22 , மு.ப. 06:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐ.ஏ.ஸிறாஜ்
பாலமுனை 1ஆம் பிரிவைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை வெள்ளிக்கிழமை (21) கடத்திச் சென்று தாக்குதல் மேற்கொள்ள எடுக்கப்பட்ட முயற்சி பொதுமக்களினால் முறியடிக்கப்பட்டுள்ளது.
பாலமுனை 1ஆம் பிரிவில் வசித்து வரும் 20 வயதான இளைஞர் ஒருவர், தொழுகை முடிந்து இரவு 8 மணியளவில் வீட்டுக்கு சென்றுள்ளார். இந்நிலையில், அதே பிரிவில் வசித்து வரும் மற்றுமொரு இளைஞர், மேற்படி இளைஞனின் வீட்டுக்குச் சென்று முச்சக்கரவண்டியில் பலவந்தமாக அழைத்துச்சென்றுள்ளார்.
இதனையடுத்து, மறைவான இடத்தில் முச்சக்கர வண்டியை நிறுத்திவைத்து, குறித்த இளைஞன் மீது தாக்குதல் மேற்கொள்ள எத்தனித்தப்போது, அவ்வழியால் சென்ற பிரதேசவாசி ஒருவர் சம்பவம் குறித்து கிராம மக்களுக்கு தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, சம்பவ இடத்துக்கு பொதுமக்கள் சென்றுள்ளனர். பொது மக்களை கண்ட குறித்த கும்பல் மேற்படி இளைஞனை அங்கேயே விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
குறித்த இளைஞனை முச்சக்கரவண்டியில் அழைத்துச் சென்றவரின் புகைப்படத்தை முகநூலில் பதிவேற்றம் செய்து கேலி செய்தமைக்கு பழி தீர்க்கும் வகையிலே, தன்மீது தாக்குதல் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர் என குறித்த இளைஞன் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்டுள்ள முறைப்பாட்டுக்கு அமைய மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago