2025 ஜூன் 26, வியாழக்கிழமை

அக்கரைப்பற்றில் ஹஜ்ஜுப் பெருநாள் புத்தாடை வழங்கள்

Niroshini   / 2015 செப்டெம்பர் 22 , மு.ப. 07:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

 -ஏ.ஜி.ஏ.கபூர்

புனித ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு இஸ்லாமிக் ரிலீப் ஸ்ரீலங்கா நிறுவனம் இஸ்லாமிக் ரிலீப் ஜெர்மன் நிறுவனத்தின் நிதியுதவியுடன் அக்கரைப்பற்று பிரதேச செயலகத்துடன் இணைந்து நடத்திய  வறுமைக் கோட்டின் கீழ் வாழும் பெண்களைத் தலைமையாகக் கொண்ட குடும்பங்கள், மாற்றுத் திறனாளிகளைக் கொண்டுள்ள மற்றும் வயோதிபர்களைக் குடும்பத் தலைவர்களாகக் கொண்டுள்ள 200 குடும்பங்களுக்கு ஹஜ் பெருநாளைக்கான புத்தாடை பரிசு வழங்கும் நிகழ்வு நேற்று திங்கட்கிழமை அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

இதன்போது, அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தினால் கிராம சேவை உத்தியோகத்தர்கள் மற்றும் சமூக சேவைப் பிரிவு உத்தியோகத்தர்களின் உதவியுடன் தெரிவு செய்யப்பட்ட 200 குடும்பங்களுக்கு தலா 3,600ரூபாய் பெறுமதியான புத்தாடைகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில், பிரதம அதிதியாக உதவிப் பிரதேச செயலாளர் எம்.எஸ்.எம்.றஸ்ஸான்,இஸ்லாமிக் ரிலீப் ஸ்ரீ லங்கா நிறுவனத்தின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி எம்.ஐ.ஸப்ரி உட்பட அதன் உத்தியோகத்தர்கள், சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எச்.ஸியாட் இஹமட், முதியோர் அபிவிருத்தி உத்தியோகத்தர் எம.ஏ.கைஸ் மற்றும்  பலரும் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .