2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

அகில இலங்கை சமாதான நீதவானாக சத்தியப்பிரமாணம்

Princiya Dixci   / 2022 செப்டெம்பர் 20 , பி.ப. 05:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எல்.எஸ்.டீன்

நிந்தவூர்- 02 முத்தகீன் பள்ளி வீதியைச் சேர்ந்த அப்துல் கரீம் முகம்மது முபாரக், அகில இலங்கை சமாதான நீதவானாக அம்பாரை மாவட்ட மற்றும் நீதிவான் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் அண்மையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

நிந்தவூர், அல்அஷ்ரக் தேசிய பாடசாலையின் பழைய மாணவரும், சாய்ந்தமருது தஃவா இஸ்லாமிய கலாபீடத்தின் முதல் ஹாபிளும், கல்வி சமூக கலாசார அமைப்பு  அதன் நிர்வாக சபை உறுப்பினராகவும் செயற்பட்டு வருவதுடன், பல்வேறு சமூகப் பணிகளிலும் ஈடுபட்டுவருகிறார்.

தற்போது இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் நூலக உத்தியோகத்தராகவும் கடமையாற்றிவரும் இவர், அப்துல் கரீம் - கலிமத்துமா ஆகியோரின் புதல்வருமாவார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .