எம்.எஸ்.எம். ஹனீபா / 2019 ஒக்டோபர் 15 , பி.ப. 05:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
அம்பாறை, அக்கரைப்பற்று ஆண்கள் வித்தியாலயத்தின் அதிபர், ஆசிரியை ஒருவரையும் தாக்கிக் காயப்படுத்திய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேக நபரை, இம்மாதம் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, அக்கரைப்பற்று நீதவான் வே.சிவகுமார், இன்று (15) உத்தரவிட்டார்.
பாடசாலை நேரத்தில் நுழைந்த குறித்த நபர், அலுவலகத்தில் இருந்த அதிபருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அங்கிருந்த அதிபரைத் தாக்கியுள்ளார். அதனைக் கண்ட ஆசிரியை விலக்க முற்பட்ட போது, அவரும் தாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தினர்;.
காயமடைந்த அதிபர் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் நிலைய சிறு குற்றப்பிரிவுப் பொறுப்பதிகாரி எம்.எஸ்.அப்துல் மஜிட் தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பாக அக்கரைப்பற்று பொலிஸார் விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.
23 Jan 2026
23 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 Jan 2026
23 Jan 2026