Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Sudharshini / 2015 ஒக்டோபர் 17 , மு.ப. 11:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
எப்.முபாரக்
ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக் காலத்துக்குள்ளே சேருவில தொகுதியிலுள்ள அனைத்து சிறு வீதிகளும் செப்பனிடப்பட்டு மக்களின் பாவனைக்கு வழங்கப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் சேருவிலத் தொகுதி பிரதான அமைப்பாளர் டாக்டர் அருண சிறிசேன தெரிவித்தார்.
சேருவில கல்லாறு வீதிகளை புனரமைக்கும் நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை(16) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'தற்போதைய ஆட்சி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியல்ல. இது நல்லாட்சியை நோக்கிய ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டுப்பலமான ஆட்சியாகும்.
இவ்வாட்சியில் கிராமப் புறங்களின் கல்வி, சுகாதாரம், போக்குவரத்து போன்ற அனைத்து துறைகளும் அபிவிருத்தி செய்து கொடுக்கப்படும்' என குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் சேருவிலத் பிரதேச சபையின் முன்னால் உறுப்பினர்கள் மற்றும் வீதி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,பொது மக்கள் எனப்பலரும் கலந்து கொண்டார்கள்.
6 minute ago
11 minute ago
01 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
11 minute ago
01 Oct 2025