2025 ஜூன் 30, திங்கட்கிழமை

அம்பாறை பட்டதாரிகளின் போராட்டம் நிறைவு

Niroshini   / 2015 ஒக்டோபர் 14 , மு.ப. 10:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்,வடமலை ராஜ்குமார்                    

அம்பாறை மாவட்ட வேலையற்ற தமிழ்ப் பட்டதாரிகளின் உண்ணாவிரதப் போராட்டம் இன்று புதன்கிழமை நிறைவுக்கு வந்துள்ளது.                                   

கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸிர் அஹமட்டுக்கும் வேலையற்ற பட்டதாரிகளின் பிரதிநிதிகளுக்குமான  பேச்சுவார்தை கிழக்கு மாகாண முதலமைச்சரின் அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்த பேச்சு வார்த்தைகளின் மூலமே அம்பாறை மாவட்ட வேலையற்ற தமிழ்ப் பட்டதாரிகளின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.

இதன்போது,கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் காங்கிரஸூம் தமிழ்த்; தேசியக் கூட்டமைப்பும் இணைந்து ஆட்சியமைத்திருக்கின்றது. ஆகவே, உங்களுடைய கோரிக்கைகளை விரைவாக நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மாகாண முதலமைச்சர் உறுதியளித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X