2025 ஜூன் 26, வியாழக்கிழமை

அம்பாறையில் கரையோர பகுதிகளை சுத்திகரிக்க ஏற்பாடு

Niroshini   / 2015 செப்டெம்பர் 20 , பி.ப. 12:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.எம்.றம்ஸான்

சர்வதேச கரையோர தூய்மைப்படுத்தல்  தினத்தையொட்டி அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பகுதிகளில் நாளை திங்கட்கிழமை சுத்திகரிப்பு நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.

நாட்டின் பலபகுதிகளிலுமுள்ள கடற்கரைப் பிரதேசம் அசுத்தமடைவதனை தவிர்த்து அப்பிரதேசத்தை சுத்தப்படுத்தி பொதுமக்களையும் சுற்றுலாப் பிரயாணிகளையும் கவரும் வகையில் தூய்மையாகவும் சுத்தமாகவும் வைத்திருப்பதே இத் திட்டத்தின் நோக்கமாகும்.

இதன் முதற்கட்டமாக கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி சுற்றாடல் பசுமை கழகம் சாய்ந்தமருது , கல்முனைக்குடி மற்றும் மாளிகைக்காடு போன்ற இடங்களிலுள்ள கடற்கரைப் பிரதேசங்களை சாய்ந்தமருது கோட்ட சுற்றாடல் முன்னோடி ஆணையாளர் எம்.ஐ.எம்.அஸ்ஹர் தலைமையில் சுத்தம் செய்யவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .