2025 ஜூன் 30, திங்கட்கிழமை

அம்பாறையில் தொழில்நுட்பக் கல்லூரி

Suganthini Ratnam   / 2015 ஒக்டோபர் 15 , மு.ப. 06:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார்  

அம்பாறை மாவட்டத்தில் 250 மில்லியன் ரூபாய் செலவில் தொழில்நுட்பக் கல்லூரி விரைவில் அமைக்கப்படுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் (ரொபின்) தெரிவித்தார்.

இதற்கான நிதியுதவியை நோர்வே அரசு வழங்குவதாக உறுதியளித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

அக்கரைப்பற்று ஸ்ரீஇராமகிருஷ்ண தேசிய பாடசாலையில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற வரவேற்பு நிகழ்வில் உரையாற்றியபோதே, அவர் இதனைக் கூறினார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'அம்பாறை மாவட்டத்தில் தமிழர்களின் கல்வி மழுங்கடிக்கப்பட்டு வருகின்றமையை நாம் அறிவோம். எமக்கு ஏற்பட்டுள்ள இந்தச் சவாலை எதிர்கொள்ள கல்விச் சமூகத்தினர் அனைவரும் இச்சந்தர்ப்பத்தில் ஒன்றுசேர வேண்டும்' என்றார்.

'மேலும், எனக்கு மக்களினால் வழங்கப்பட்ட 05 வருடகாலத்தினுள் சிறந்த பெறுபேற்றைப் பொருளாதார மற்றும்  கல்வியிலும் ஏற்படுத்துவேன். இதற்காக புலம்பெயர் அமைப்புகள் பல என்னுடன் கைகோர்த்துள்ளமையை மகிழ்வுடன் தெரிவிக்கிறேன்' எனவும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X