Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 23, திங்கட்கிழமை
Suganthini Ratnam / 2015 செப்டெம்பர் 08 , மு.ப. 06:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வி.சுகிர்தகுமார்
பனைமர மூலப்பொருட்களைக் கொண்டு பூங்கொத்துகள் உள்ளிட்ட அலங்காரப் பொருட்களை தயாரிப்பது தொடர்பான நான்கு நாள் பயிற்சிநெறியில் சுமார் 50 பேர் பங்குபற்றியுள்ளனர்.
திங்கட்கிழமை (07) ஆரம்பமாகிய இப்பயிற்சிநெறி, எதிர்வரும் 10ஆம் திகதிவரை அக்கரைப்பற்று வை.எம்.சி.ஏ. மண்டபத்தில் நடைபெறும். இதில் ஆலையடிவேம்பு, திருக்கோவில், பொத்துவில், இறக்காமம் ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட தமிழ், முஸ்லிம் யுவதிகள் பங்குபற்றியுள்ளனர்.
கிழக்கு மாகாண முதலமைச்சரின் செயலக நிதியுதவியுடனும் அம்பாறை மாவட்ட கிராம அபிவிருத்தித் திணைக்களத்தின் ஏற்பாட்டிலும் இப்பயிற்சிநெறி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன் ஆரம்ப நாள் நிகழ்வில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன், கிராம அபிவிருத்தி உத்தியோகஸ்;தர் எம்.ரி.ஏ.நாஹிப், அம்பாறை மாவட்ட கிராம அபிவிருத்தித் திணைக்களத்தின் அபிவிருத்தி உத்தியோகஸ்தர் எம்.ஏ.எம்.பஷீர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
3 hours ago
5 hours ago