2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

ஆயுர்வேத வைத்தியசாலைக்கு அடிக்கல் நாட்டிவைப்பு

Suganthini Ratnam   / 2015 செப்டெம்பர் 27 , மு.ப. 05:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில்

அம்பாறை, நிந்தவூரில் 10 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள ஆயுர்வேத மாவட்ட வைத்தியசாலைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, சனிக்கிழமை மாலை (26) இடம்பெற்றது.

அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் சுகாதாரப் பிரதியமைச்சருமான பைசால் காசீமின் முயற்சியின் கீழ் இந்த வைத்தியசாலை நிர்மாணிக்கப்படவுள்ளது.

நிந்தவூர் ஆயுர்வேத மாவட்ட வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் எம்.ஏ.நபீல் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதியமைச்சர் பைசால் காசிம், கிழக்கு மாகாண ஆயுர்வேத ஆணையாளர் டாக்டர் எஸ்.சிறிதரன், கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் மத்திய நிலையத்தின் பணிப்பாளர் டாக்டர் ஏ.அலாவுதீன், நிந்தவூர் பிரதேச செயலகத்தின் உதவிப் பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .