2025 மே 22, வியாழக்கிழமை

ஆற்று மண் ஏற்றியவருக்கு அபராதம்

Princiya Dixci   / 2016 ஜனவரி 29 , மு.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா
 
அக்கரைப்பற்று பிரதேசத்தில் அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக ஆற்று மண் ஏற்றிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட நபரொருவருக்கு, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதவானும், நீதவான் நீதிமன்ற நீதவானுமாகிய திருமதி நளினி கந்தசாமி, இன்று வெள்ளிக்கிழமை (29) விதித்துள்ளார்.
 
அக்கரைப்பற்று பள்ளிக்குடியிருப்பு பிரதேசத்தில் அக்கரைப்பற்று பொலிஸாரால் குறித்த நபர், நேற்று வியாழக்கிழமை (28) கைது செய்யப்பட்டிருந்தார்.
 
குறித்த நபரை, அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதவானும் நீதவான் நீதிமன்ற நீதவானுமாகிய திருமதி நளினி கந்தசாமி முன்னிலையில் இன்று (29) ஆஜர்செய்த போது 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துத் தீர்ப்பளித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X