Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Princiya Dixci / 2016 ஒக்டோபர் 07 , மு.ப. 09:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம். ஹனீபா
அம்பாறை, அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒலுவில் பள்ளைக்காட்டுப் பிரதேசத்தில் அனுமதிப்பத்திரத்தை மீறி சட்டவிரோதமாக டிப்பர் வண்டியில் ஆற்று மண் ஏற்றிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட நபரொருவருக்கு, 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதவானும், நீதவான் நீதிமன்ற நீதவானுமாகிய திருமதி நளினி கந்தசாமி, இன்று வெள்ளிக்கிழமை (07) தீர்ப்பளித்துள்ளார்.
அக்கரைப்பற்றுப் பொலிஸாரால் குறித்த நபர், இன்று (07) கைது செய்யப்பட்டிருந்தார்.
குறித்த நபரை, அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதவானும், நீதவான் நீதிமன்ற நீதவானுமாகிய திருமதி நளினி கந்தசாமி முன்னிலையில் ஆஜர் செய்தபோது, இவருக்கெதிராக ஏற்கெனவே 03 குற்றங்கள் இருப்பதால் 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துத்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
11 minute ago
21 minute ago
1 hours ago