Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Suganthini Ratnam / 2016 ஓகஸ்ட் 09 , மு.ப. 04:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
-கனகராசா சரவணன்
அம்பாறை, ஆலையடிவேம்புப் பிரதேசத்தில் இடம்பெற்ற கத்திக் குத்துச் சம்பவத்தைத் தொடர்ந்து தலைமறைவாகியிருந்ததாகக் கூறப்படும் இருவரை திங்கட்கிழமை (08) இரவு பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
மேற்படி பிரதேசத்தைச் சேர்ந்த அண்ணனுக்கும் தம்பிக்குமிடையில் தாய் வழங்கிய சொத்துத் தொடர்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (07) வாய்த்தர்க்கம் ஏற்பட்டு, கைகலப்பாக மாறியது. இதன்போது, சிறியதந்தையின் மீது அண்ணனின் மகன் கத்தியால் குத்தியுள்ளார்.
இதில் படுகாயமடைந்த பூபதி (வயது 35) அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனை அடுத்து 51 வயதுடைய அண்ணனையும் 21 வயதுடைய அவரது மகனையும் கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago
18 May 2025