Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Suganthini Ratnam / 2016 ஓகஸ்ட் 15 , மு.ப. 07:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.ஹனீபா
நல்லிணக்க பொறிமுறை பற்றிய கலந்தாலோசனைக்கான செயலணியினரிடம் அம்பாறை மாவட்டத்திலிருந்து 315 பேர் தமது ஆலோசனைகளையும் கருத்துக்களையும் இதவரையில் முன்வைத்துள்ளதாக அச்செயலணியின் அம்பாறை மாவட்ட குழுவின் தலைவர் எஸ்.எச்.எம். மனார்தீன் இன்று (15) திங்கட்கிழமை தெரிவித்தார்.
நல்லிணக்க பொறிமுறை பற்றிய கலந்தாலோசனைக்கான செயலணியின் அமர்வு அம்பாறை மாவட்டத்தில் கடந்த சனிக்கிழமை (13) அட்டாளைச்சேனையிலும், ஞாயிற்றுக்கிழமை (14) கல்முனையில் நடைபெற்றதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதில் அட்டாளைச்சேனையில் 300 பேரும், கல்முனையில் 15 பேரும் தமது ஆலோசனைகள் கருத்துக்களை முன்வைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.
இதில் அக்கரைப்பற்று, பொத்துவில் மற்றும் பாலமுனை ஹுஸைனியா நகர் மக்கள் கூடுதலான காணி தொடர்பான கருத்துக்களை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago
18 May 2025