வி.சுகிர்தகுமார் / 2018 ஜனவரி 23 , மு.ப. 11:44 - 0 - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை, ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்துக்குட்பட்ட சின்னமுகத்துவாரம் களப்பு பகுதியில் பல வருடங்களுக்கு பின்னர் இவ்வருடம் இறால் உற்பத்தி வெகுவாக அதிகரித்துக் காணப்படுகின்றது.
இதனால் இப்பிரதேச மீனவர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பதுடன், களப்பு பிரதேசம் மாலை வேளையில் இறால் பிடிக்கும் மீனவர்களால் சூழ்ந்து காணப்படுகின்றமையையும் அவதானிக்க முடிகின்றது.
குறிப்பிட்ட சில மணித்தியாலங்களுக்குள் ஒரு மீனவரால் வலை வீச்சின் மூலம் 10 கிலோகிராம் வரையில் இறால் பிடிக்கப்படும் அதேவேளை, அதிகாலை வரை வீசுகின்றவர்கள் சிலவேளை 20 கிலோகிராம் வரை பிடிப்பதாகவும் மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, சாதாரண நாட்களில் 1,000 ரூபாய்க்கும் அதிகமான விலையில் விற்கப்பட்ட இறால், தற்போது 450 ரூபாய் வரைக்கும் வீழ்ச்சியடைந்துள்ளதால், நுகர்வோரும் மகிழ்ச்சியுடன் இறாலைக் கொள்வனவு செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
8 minute ago
36 minute ago
59 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
36 minute ago
59 minute ago
2 hours ago