2025 மே 13, செவ்வாய்க்கிழமை

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்; மீண்டும் விளக்கமறியல்

Editorial   / 2020 ஜனவரி 21 , பி.ப. 03:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாறுக் ஷிஹான்

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்  சம்பவங்களுடன் தொடர்புடையோர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கைதானோரில் 12 பேருக்கு, பெப்ரவரி மாதம் 3ஆம் திகதி வரை மீண்டும்  விளக்கமறியலில் வைக்குமாறு, கல்முனை நீதவான் நீதிமன்று உத்தரவிட்டது.

குறித்த வழக்கு,  நீதிவான்  ஐ.என்.றிஸ்வான் முன்னிலையில் விசாரணைக்கு இரு வேறு  சந்தர்ப்பங்களில், இன்று ( 21)   எடுத்துக்கொள்ளப்பட்டது.

மேற்படி  விசாரணைக்காக வந்த சந்தேகநபர்கள்  அனைவரும் பல்வேறு சந்தர்ப்பங்களில் குற்றப்புலனாய்வு பிரிவு,  பாதுகாப்புத் தரப்பினர்களால் அவசரகால சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, அம்பாறை மாவட்டத்தின்  பல்வேறு பிரதேசங்களில் இருந்து கைதாகி, பல  மாதங்களுக்கு மேலாக விளக்கமறியலில்  வைக்கப்பட்டிருந்தனர்.

குறித்த சந்தேக நபர்கள் தொடர்பான  பிணை கோரிக்கை குறித்து சட்டமா அதிபர் திணைக்களத்தின் கவனத்துச்குச் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அதேவேளை, பொலிஸாரின் ஆட்சேபனை காரணமாக   அனைத்து சந்தேக நபர்களதும்    விளக்கமறியல் மீண்டும்   நீடிக்கப்பட்டு,  இவ்வழக்கு விசாரணை, பெப்ரவரி 3ஆம்  திகதி வரை  ஒத்திவைக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X