2025 மே 12, திங்கட்கிழமை

ஏப்ரல் தாக்குதல்; சந்தேகநபர்களுக்கு மீண்டும் விளக்கமறியல்

Editorial   / 2019 டிசெம்பர் 25 , பி.ப. 03:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாறுக் ஷிஹான்

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்  சம்பவங்களுடன் தொடர்புடையோர் என்ற சந்தேகத்தின் பேரில்  கைதான 12 பேரையும், மீண்டும் 14 நாள்கள் விளக்கமறியலில் வைக்குமாறு, கல்முனை நீதவான் நீதமன்றம் உத்தரவிட்டது.

குறித்த வழக்கு, மாவட்ட நீதிபதியும் கல்முனை நீதிமன்ற பதில் நீதிபதியுமான பயாஸ் றஸாக் முன்னிலையில் விசாரணைக்கு இரு வேறு  சந்தர்ப்பங்களில்   நேற்று ( 24)   எடுத்துக்கொள்ளப்பட்டது.

குறித்த   தாக்குதல் சம்பவத்துடன்   கைதாகி, கடந்த வாரம் விளக்கமறியலில்  வைக்கப்பட்ட அனைவரும்,  சட்டமா அதிபரின் பணிப்புரைக்கமைய, வெவ்வேறு சிறைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டிருந்த பின்னர், மீண்டும் நேற்று முன்தினம் விசாரணைக்காக ஆஜர்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இவ்விசாரணைகள் யாவும் நீதவானின் பிரத்தியேக அறையில் விசாரணைகள் இடம்பெற்றது.

இவ்வாறு விசாரணைக்காக வந்த சந்தேக நபர்கள்  அனைவரும் பல்வேறு சந்தர்ப்பங்களில் குற்றப்புலனாய்வுப் பிரிவு, பாதுகாப்பு தரப்பினர்களால் அவசரகால சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, கடந்த காலங்களில் அம்பாறை மாவட்டத்தின்  பல்வேறு பிரதேசங்களில் இருந்து கைதாகி,  பல  மாதங்களுக்கு மேலான விளக்கமறியலில்  வைக்கப்பட்டிருந்தனர்.

மேலும் பொலிஸாரின் ஆட்சேபனையுடன்  அனைத்து சந்தேக நபர்களதும்    விளக்கமறியல் மீண்டும்   நீடிக்கப்பட்டு,  இவ்வழக்கு விசாரணை அடுத்த வழக்கு தவணையை  ஜனவரி 07ஆம்  திகதி வரை  ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கைதான சந்தேகநபர்கள் அனைவரும் காத்தான்குடி, கல்முனை, சாய்ந்தமருது, சம்மாந்துறை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்களாவர்.

இதில் கல்முனை, சாய்ந்தமருதில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபர்களுக்கு உதவி வழங்கிய சந்தேகநபர்களும் கடும் பாதுகாப்புக்கு மத்தியில் அழைத்து வரப்பட்டமை குறிப்பிடத்தக்கது 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X