2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

ஒலுவில் கடலரிப்புக்கான ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது

Suganthini Ratnam   / 2015 செப்டெம்பர் 11 , மு.ப. 07:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

ஒலுவில் கடற்கரைப் பிரதேசத்திலுள்ள ஏற்பட்டுள்ள கடல் அரிப்பை தடுக்குமாறு கோரி இன்று வெள்ளிக்கிழமை பகல் மேற்கொள்ளப்படவிருந்த ஆர்ப்பாட்டப் பேரணி கைவிடப்பட்டுள்ளதாக அதன் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

கடந்த பல மாதங்களாகவிருந்து கடல் அரிப்புக்குள்ளாகி வரும் ஒலுவில் கடற்கரைப் பிரதேசம் தொடர்பில் அரசாங்கத்துக்கும் அரசியல்வாதிகளின் கவனத்துக்கு கொண்டுவரும் ஆர்ப்பாட்டப் பேரணி நடைபெறவிருந்தது.

ஒலுவிலுள்ள பள்ளிவாசல்களின் நிர்வாக சபைகள், சமூக சேவை அமைப்புக்கள், பொது நிறுவனங்கள், கிராம அபிவிருத்திச் சங்கங்கள், விளையாட்டுக்கழகங்கள் மற்றும் இளைஞர் அமைப்புகள் ஆகியன இணைந்து இந்த ஆர்ப்பாட்டப் பேரணியை ஜும்மா தொழுகையின் பின்னர் நடத்தவிருந்தது.

இருப்பினும், தவிர்க்க முடியாத சில காரணங்களினால் இந்த ஆர்ப்பாட்டப் பேரணி கைவிடப்பட்டுள்ளதாகவும் ஏற்பாட்டாளர்கள் கூறினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .