2025 மே 19, திங்கட்கிழமை

கொண்டுவட்டுவான பிரதேசத்தில் தீ பரவியதில் 2 ஏக்கர் நாசம்

Suganthini Ratnam   / 2016 ஜூலை 11 , மு.ப. 10:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வசந்த சந்திரபால

அம்பாறை, கொண்டுவட்டுவான பிரதேசத்தில் அமைந்துள்ள இராணுவ முகாமில் இராணுவத்தினர் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளையில், மோட்டார்க் குண்டு ஒன்று வெடித்ததில் அப்பிரதேசத்தின் காட்டுப்பகுதியில் தீ பரவியது.

இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற இந்தச் சம்பவத்தின்போது பரவிய தீயை விமானப்படையின் தீயணைப்புப் பிரிவினரும் அம்பாறை நகர சபையின் தீயணைப்புப் பிரிவினரும் இணைந்து அணைத்துள்ளனர்.

இந்த தீ விபத்துக் காரணமாக குறித்த பகுதியில் 02 ஏக்கர் தீயில் எரிந்து நாசமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X