2025 ஜூன் 26, வியாழக்கிழமை

கைப்பணி கண்காட்சி கூடம்

Niroshini   / 2015 செப்டெம்பர் 21 , பி.ப. 01:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஐ.ஏ.ஸிறாஜ்

சிறுவர் இராஜாங்க அமைச்சு மற்றும் அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தின் அணுசரனையுடன் அக்கரைப்பற்று கல்வி வலய முன்பள்ளி சிறார்களின் ஆக்கத்திறனை மேம்படுத்துவதற்கான கைப்பணி கண்காட்சி கூடம் அக்கரைப்பற்று கலாசார மண்டபத்தில் இன்று காலை 11.30 மணிக்கு திறந்து வைக்கப்பட்டது.

அக்கரைப்பற்று பிரதேச செயலக உதவித்திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எம்.தமீம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலாளர் எம்.எஸ்.எம்.றஸான் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு கண்காட்சி கூடத்தினை திறந்து வைத்தார்.

இதன்போது, 41 முன்பள்ளி மாணவர்களின் ஆக்கப்பொருட்கள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிகழ்வில் அக்கரைப்பற்று கல்வி வலய முன்பள்ளி உதவிக்கல்விப்பணிப்பாளர் என்.ஜமால்டீன், உதவித்திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எல்.ஹுசைனுடீன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .