2025 ஜூன் 23, திங்கட்கிழமை

காரைதீவில் செயலமர்வு

Niroshini   / 2015 செப்டெம்பர் 01 , மு.ப. 09:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எஸ்.எம்.முஜாஹித்

காரைதீவு பிரதேச செயலக பிரிவிலுள்ள சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழில் முயற்சியாளர்களுக்கு கடனுதவி வழங்குவது தொடர்பான செயலமர்வு நேற்று திங்கட்கிழமை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில், இலங்கை மத்திய வங்கியின் திருகோணமலை கிளை சிரேஸ்ட முகாமையாளர் எஸ்.பிரபாகர்,காரைதீவு பிரதேச செயலாளர் திருமதி எஸ்.ஸ்ரீகாந்த்,உதவி பிரதேச செயலாளர்  நிருபா பிருந்தன்,கிராமிய பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் கே.ஜெயராஜி, பிரதேசத்திலுள்ள இலங்கை வங்கி, மக்கள் வங்கி, பிரதேச அபிவிருத்தி வங்கி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது,சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழில் முயற்சியாளர்களுக்கு அவர்களது தொழிலை விருத்தி செய்யும் நோக்குடன் பிரதேசத்திலுள்ள வங்கிகளினூடாக கடன் உதவி பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக காரைதீவு பிரதேச செயலாளர் திருமதி எஸ்.ஸ்ரீகாந்த் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .