2025 மே 19, திங்கட்கிழமை

கேரள கஞ்சாவுடன் இருவர் கைது

Suganthini Ratnam   / 2016 ஓகஸ்ட் 11 , மு.ப. 04:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ஜமால்டீன், கனகராசா சரவணன்

அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை ஆகிய பிரதேசங்களில் கேரள கஞ்சாவை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் 02 பேரை நேற்று புதன்கிழமை மாலை  கைதுசெய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் அம்பாறை விசேட போதை ஒழிப்புப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலை அடுத்து அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை ஆகிய பிரதேசங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்போது, அக்கரைப்பற்றுப் பிரதேசத்தில் 03 மில்லிகிராம் கஞ்சாவுடன் 26 வயதுடைய ஒருவர் கைதுசெய்யப்பட்டார். இதேவேளை, அட்டாளைச்சேனைப் பிரதேசத்தில் 27 மில்லிகிராம்  கஞ்சாவுடன்  26 வயதுடைய மற்றையவர் கைதுசெய்யப்பட்டார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X