2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

கேரள கஞ்சாவடன் கைதானவருக்கு விளக்கமறியல்

Princiya Dixci   / 2016 செப்டெம்பர் 07 , மு.ப. 06:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ஜமால்டீன்

கேரள கஞ்சாவை தன்வசம் வைத்திருந்தார் என்ற குற்றஞ்சாட்டில் கைதுசெய்யப்பட்ட நபருக்கு  இம்மாதம் 13ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதிபதியும் மேலதிக நீதவான் நீதிமன்ற நீதிபதியுமான திருமதி நளினி கந்தசாமி நேற்று செவ்வாய்கிழமை (06) உத்தரவிட்டார்.

அக்கரைப்பற்று பதுர் நகர் பிரதேசத்தை நபரொருவர் கேரள கஞ்சா வைத்திருப்பதாக அக்கரைப்பற்று பொலிஸ் இரகசிய பிரிவினருக்கு கிடைத்த தகவலையடுத்து பொலிசார் நேற்று  மேற்கொண்ட சுற்றிவளைப்பையடுத்து குறித்த சந்தேக நபர் தகதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து, 253 மில்லி கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X