Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Suganthini Ratnam / 2016 ஒக்டோபர் 07 , மு.ப. 04:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பைஷல் இஸ்மாயில்
வெளிமாகாணங்களில் கடமையாற்றுவதற்கான புதிதாக நியமனம் பெற்றுக்கொண்ட கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த கல்வியல் கல்லூரி ஆசிரியர்கள் 195 பேர்; நேற்று மாலை (06) கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட்டைச் சந்தித்துக் கலந்துரையாடினர்.
இச்சந்திப்பு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர் தலைமையில் மாகாண சபையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இதன்போது, குறித்த ஆசிரியர்கள் தங்களுக்கான நியமனத்தை கிழக்கு மாகாணத்துக்கே பெற்றுத்தருமாறும் கோரியிருந்தனர்.
கிழக்கு மாகாணத்திலுள்ள அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 195 ஆசிரியர்களே தங்களுக்கான நியமனத்தை கிழக்கு மாகாணத்துக்கு மாற்றித்தரக் கோரியிருந்தனர்.
இதற்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் கருத்து தெரிவிக்கையில், 'கிழக்கு மாகாணத்தில் ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுவதையும் இதனால் அம்பாறை மாவட்ட பிரதேசத்திலுள்ள இறக்காமம் பிரதேச பாடசாலைகள் மூடிக்காணப்படுவதை கல்வி அமைச்சரிடமும், அதன் செயலாளரிடமும் சுட்டிக்காட்டி குறித்த ஆசிரியர் நியமனம் வழங்கப்படும்போது கிழக்கு மாகாண ஆசிரியர்களை கிழக்கு மாகாணத்துக்கே நியமிக்கவேண்டும் என்று கோரியிருந்தோம்.
இந்த நியமனத்தில் எமது மாகாணத்துக்கும் வெளி மாகாணங்களுக்கும் கிழக்கு மாகாண ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான சகல நடவடிக்கைகளையும் முன்னெடுப்போம்' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
4 hours ago