Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 ஜூலை 21 , மு.ப. 07:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம். ஹனீபா
அம்பாறை, திருக்கோவில் விநாயகபுர பிரதேசத்தில், கஞ்சாவை வைத்திருந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட பெண்ணொருவர் உள்ளிட்ட 3 பேரையும் தலா 1 இலட்சம் ரூபாய் சரீரப்பிணையில் செல்வதற்கு அக்கரைப்பற்று மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதியான நளினி கந்தசாமி, நேற்று புதன்கிழமை (20) அனுமதி வழங்கினார்.
திருக்கோவில் பொலிஸாரால் செவ்வாய்க்கிழமை (19), குறித்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, அங்கிருந்த வீடொன்றில் இருந்து 365 கிராம் நிறையுடைய கஞ்சா கைப்பற்றப்பட்டதுடன், பெண்ணொருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இதன் பின்னர் அதே பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது, 10 கிராம் கஞ்சாவை வைத்திருந்த 45 வயதுடைய நபரும் 60 கிராம் கஞ்சாவை வைத்திருந்த 55 வயதுடைய நபரும் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட மூவருக்குமே, தலா 1 இலட்சம் ரூபாய் சரீரப்பிணையில் செல்வதற்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
43 minute ago
59 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
59 minute ago
1 hours ago