2025 மே 19, திங்கட்கிழமை

கஞ்சா வைத்திருந்தவருக்கு விளக்கமறியல்

Suganthini Ratnam   / 2016 ஜூலை 27 , மு.ப. 11:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ஜமால்டீன்

கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதான இளைஞர் ஒருவரை எதிர்வரும் 9ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதவானும் மேலதிக நீதவான் நீதிமன்ற நீதவானுமான திருமதி நளினி கந்தசாமி, நேற்று செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டார்.

அக்கரைப்பற்று பொலிஸ் போதைப்பொருள் பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்றுமுன்தினம்; திங்கட்கிழமை (25) இரவு அட்டாளைச்சேனை பிரதேசத்தில் நடத்திய சுற்றிவளைப்பின்போது, இச்சந்தேக நபரை சோதனைக்கு உட்படுத்தியபோது இளைஞனிடம் இருந்து  3 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X