2025 மே 19, திங்கட்கிழமை

கஞ்சா வியாபாரிக்கு விளக்கமறியல்

Suganthini Ratnam   / 2016 ஜூலை 29 , மு.ப. 06:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ஜமால்டீன்

கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட 63 வயதுடைய ஒருவரை எதிர்வரும் 11ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று மாவட்ட நீதிவான் நீதிமன்ற நீதவானும் மேலதிக நீதவான் நீதிமன்ற நீதவானுமான திருமதி நளினி கந்தசாமி, நேற்று வியாழக்கிழமை உத்தரவிட்டார்.

இச்சந்தேக நபர் கஞ்சா வைத்திருந்தமை தொடர்பில் அக்கரைப்பற்று பொலிஸ் போதைப்பொருள் குற்றத்தடுப்புப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலையடுத்து, நேற்றுமுன்தினம்  புதன்கிழமை நடத்திய  சோதனையின்போது, இச்சந்தேக நபரிடமிருந்து 26 கிராம் கஞ்சா இருந்தமை தெரியவந்தது.

இது இவ்வாறிருக்க,  கடந்த 20ஆம் திகதி குறித்த நபரின் அக்கரைப்பற்று பழைய சினிமா வீதியிலுள்ள வீட்டிலிருந்து 16 கிராம் கஞ்சாவை கைப்பற்றிய சந்தர்ப்பத்தில் பொலிஸாரிடமிருந்து இச்சந்தேக நபர் தப்பிச்சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.   

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X