2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு

Suganthini Ratnam   / 2015 செப்டெம்பர் 23 , மு.ப. 11:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ஜமால்டீன்

வெள்ளப் பாதிப்புக்குள்ளான மாணவர்கள் 800 பேருக்கு  முதற்கட்டமாக நெதர்லாந்து இஸ்லாமிக் ரிலிப் தொண்டு நிறுவனம் கற்றல் உபகரணங்களை வழங்கியுள்ளதாக அந்;நிறுவனத்தின் பாடசாலைகளுக்கு பொறுப்பான திட்டமிடல் அதிகாரி ஐ.எல்.எம்.பைஸல் தெரிவித்தார்.

அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி தேசிய பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள்; நிகழ்வு இன்று புதன்கிழமை நடைபெற்றது. இதன்போதே அவர் இதனைக் கூறினார்.

கல்முனைக் கல்வி வலயத்தில் 300 மாணவர்களுக்கும் அக்கரைப்பற்று கல்வி வலயத்தில் 275 மாணவர்களுக்கும் பொத்துவில் உப கல்வி வலயத்தில் 225 மாணவர்களுக்கும் கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன. அப்பியாசக் கொப்பிகள், கற்றல் உபகரணப்பெட்டிகள், பாதணிகள், புத்தகப்பைகள் உட்பட சுமார் 2,500 ரூபாய்  பெறுமதியான கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .